♡ கனவுகளைச் சேகரிக்காதே.2♡

உதடுகளும்… உதடுகளும் கோர்த்துக் கொண்டன.! பற்களும்.. பற்களும் மோதிக் கொண்டதில் சில்லறைச் சத்தங்கள் எழுந்தன.!!
சிறிது நேர.. மௌன அணைப்புக்குப் பின்… சத்யா. . மறுபடி.. ட்ராமாவை ஆரம்பித்தாள்.!
” டியர்… கிளம்பலையான்னு… முணுமணுக்கனும் நீங்க. ..” என்றாள்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

” முணுமுணுத்தேன்..!” அவனது உதடுகள் அவள் கழுத்தில் கோலமிட்டன.
” என்ன அவசரம்பேன்..?”
பூவரசு ” உங்க வீட்ல தேடுவாங்களேம்பேன்..”
”எங்க வீட்ல தேடறது பொய்தானேம்பேன்..”
” ஸோ… நான். ..??”
” ஸோ.. நீங்க. .! வீட்ல போய்.. இந்த வயிறு நெறைய சாப்பிட்டு. .. இந்த மனசு நெறைய.. தூங்கனு சொல்லனும்..”
” சொன்னேன்…!”
” உங்கள பாத்துட்டு போனப்பறம் சரியா சாப்பிடறதும் இல்லை… தூங்கறதும் இல்லை..ம்பேன்.”
” ஏ…ஏன்..ம்பேன்..??”
”என்னிக்கு நீங்க… மூணு வேளை சாப்பிடறீங்களோ.. அன்னிக்குத் தான் நானும் நல்லா.. சாப்பிடுவேன். ! நீங்க என்னிக்கு நிம்மதியா தூங்கறீங்களோ.. அன்னிக்குத்தான்.. நானும் நல்லா தூங்குவேன்ம்பேன்.” என அவள் சிரித்துக் கொண்டு சொல்ல…
அவன் சீரியஸாகிக் கேட்டான்.
”உண்மையாவா சத்யா. .?”
” ஆமானு வேற சொல்லனுமா?”
”நீ.. ஏன் சத்யா… எனக்காக…?” வருந்தும் குரலில் சொன்னான்.
”என்ன தப்பு…? நீங்க…”
” நான் இப்படி இருக்கேன்னா.. என் சூழ்நிலை அப்படி…! உனக்கு என்ன கொறை…?”
உடனே தன் தவறை உணர்ந்தவள் போல.. அவனை இயல்பாக்க முயன்றாள்.!
” ஏய்.. ரிலாக்ஸ்பா…! சரி… சரி..’சீ ‘ பண்ணலாமா..?” என அவன் தாடையைப் பிடித்தாள்.
” நீ… இப்படி பண்றது.. நல்லால்ல சத்யா..”
” சீ.. பண்றதா…?” சிரித்தாள்.
அவன் முறைத்தான்! அந்த முறைப்பின் ஆழம். . அவளது உள்ளுணர்வை எச்சரித்தது.! இது போன்ற ஆவேச வேளைகளில்… அவன் கண்களில் தெரியும். .. அக்னி.. ஜுவாலையை..அவள் மட்டுமே அறிவாள்.! அந்த அக்னிக்கு. . எத்தனை ஆற்றல் உண்டென்பதை அவள் நன்றாகவே அறிவாள்.!
உடனே குழைந்தாள்.! அவன் கைகளை எடுத்து. .. அவள் கழுத்தில் மாலையாகப் போட்டு. . அவன் சிணம் தனிக்க முயன்றாள். !
” இதனாலதான் இத்தனை நாளா சொல்லாம இருந்தேன். நான் ஒரு கேனச் சிரிக்கி.. அவசரப் பட்டு.. உங்க மூடைக் கெடுத்துட்டேன்.! ஸாரிப்பா..!! அதெல்லாம். . மறந்துருங்க.. இந்த சன்டே… எங்க போலாம்?”
சுரத்தின்றி.. அவளைப் பார்த்தான். கண்களில் வலியோடு.!
” போலாம்பா…” என்று கொஞ்சினாள்.
” எங்க. .?”
” ஊட்டி.. இல்லேன்னா. . மழம்புலா…!”
” உன்.. சாய்ஸ்…?”
”எல்லாமே என் சாய்ஸ்தானா.? இந்த ஒரு தடவயாவது.. நீங்க சூஸ் பண்ணுங்களேன். .”
அவன் உதடுகளில் வறண்ட.. புண்ணகை.!
” உம்..??” அவன் கண்ணத்து தாடியை. . வருடினாள்.!
”என்னை கூட்டிட்டு போறவ நீதானே..?”
அவளுக்கு கோபம் வந்து விட்டது. ”ஸ்டுப்பிட் என்ன பேச்சு இது..? எத்தனை தடவை சொல்லியிருக்கேன். இந்த மாதிரி பேசக்கூடாதுனு..? இன்னொரு தடவ இந்த மாதிரி சொன்னீங்க… அப்றம்… அப்றம்..”
என்ன என்பதுபோல அவளையே பார்த்தான்.
சிரிக்காமல் சொன்னாள் ”அப்றம் நானும் வேலைக்குப் போறதை நிப்பாட்டிருவேன் ”
அவன் சிரித்தான். வேதணை கலந்த சிரிப்பு..!!
அவன் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தாள். உதட்டில் மெண்மையாக முத்தமிட்டுவிட்டுச் சொன்னாள்.
” ப்ளீஸ்ப்பா..! ரிலாக்ஸ்..!!”
” அப்படியென்ன… நான் ஒசத்தி?”
”ஆண்ங்கற தகுதி உங்களுக்கு இருக்கில்ல…? அது மாதிரி பெண்ணுங்கற தகுதி எனக்கிருக்கு…! இதுல.. ஒசத்தி. .தாழ்த்தி.. எங்க வந்துச்சி..?”
” நா.. ஒரு வேலையில்லாத வெட்டிப் பையன்…!!”
” வேலைக்கும்.. ஆண்..பெண் காதலுக்கும் என்ன சம்பந்தம்.?”
” பணம். .?”
” நான் லவ்தான பண்றேன்..? விபச்சாரம் பண்ணலையே.. எதுக்கு பணம்..? பணம்தான் எனக்கு தேவைன்னா.. உங்கள ஏன் நான் லவ் பண்றேன்..?”
அவளது கேள்வியின் தாத்பர்யம் புரிந்து. . மெதுவாக.. ”ஸாரி. .” என்றான்.
” பொல்லாத ஸாரி. .”என்றாள். முணுமுணுப்பாக.
” ஏய். . ரியலா.. ஸாரிடா..” அவள் மோவாயைப் பிடித்தான்.
அவள் சாமாதாணமாகி விட்டாள்.
” நான் கெளம்பட்டுமா..?”என்றாள்.
” கெளம்பறியா…?”
” அதுக்குள்ளாற.. மறந்தாச்சா.?” சிரித்து ”சரி..’சீ ‘ பண்ணலாமா.?” எனக் கேட்டாள்.
” உனக்கு ரொம்பத்தான்.. துணிச்சல் சத்யா. .”
” ஹா…! லவ் பண்றேனே..!”

அவளை அணைத்து.. அவளின் உதடு சுவைத்தான்.! அவளது முழு உடம்பும் அவன் கரங்களில் துவண்டது.!!
அவனது உடம்பு முறுக்கேறியது. உஷ்ணம் தலைக்கேறி… கண்களில் மின்மினிகள் பறந்தன.! சில நிமிடங்கள் மௌனமாக நகர்ந்தன.!
” ஐ’ம்.. ஸோ.. ஸாரி. ..!! ” என அவனிடமிருந்து விலகினாள்.
”ஸோ… ஸ்வீட். .!!” என்றான.” என் சத்யாவ எங்க தொட்டாலும் இனிக்குது.”
எழுந்து நின்றாள். சுற்றிலும் பார்த்தாள். இருட்ட ஆரம்பித்திருந்தது.
அவன் எழ… அவனுக்கு கை கொடுத்தாள். சுருக்கம் விழுந்த உடையை சரி பண்ணி.. துப்பட்டாவை மார்பில் போட்டாள்.
” உனக்கு சுடியவிட.. சேலைதான் நல்லாருக்கு. ..!” என்றான்
” அதுக்காக… இருக்கற சுடிய என்ன பண்ண முடியும். ..?”
புல் தரையில் கிடந்த… தோள் பையை எடுத்து அவள் தோளில் போட்டு விட்டான்.
” கைக்குட்டை… ப்ளீஸ். ..”என்றாள்.
பேண்ட் பாக்கெட்டில் இருந்து. . கைக்குட்டையை எடுத்து நீட்டினான்.
” உன்னோடது என்னாச்சு. .?”
” இருக்கே ”சிரித்தாள் ”இருந்தாலும். . என் பூவோட வாசணையே தனிதான். ” என்றுவிட்டு. . முகம் துடைத்தாள்.
” ஓகோ. . அப்படி ஒண்ணு இருக்கோ..?” என அவள் கைப்பை ஜிப்பைத் திறந்து. . பூப்போட்ட அவளது கைக்குட்டையை எடுத்து முகம் துடைத்தான். அதை அவனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.!
” ரசணையான ஆளுப்பா…” என்றாள்.
”கஷ்டப் படறவனுக்குத்தான் ரசணையெல்லாம் வரும். .! அதாவது மெண்மையான உணர்வுகள் இருக்கறவன் எல்லாம்.. கஷ்டப் படுவான்..”
அவனது விரல்களைக் கோர்த்து.. மெண்மையாக அழுத்திக் கொடுத்தாள்.
”என் ஆண் ரசணயுளளவனாத்தான் இருக்கனும்..! அவனோட கஷ்டத்தை தாங்க நான் இருக்கேன். .! ”என்றாள்.
கைகோர்த்து நடந்து. . இருவரும் பூங்காவை விட்டு வெளியேறினர்..!!
☉ ☉ ☉
பூமிப் பெண்… சூரியனைப் பார்த்து.. கண்ணம் சிவந்த.. காலை..!
அவன் காத்திருந்தான்.. அவள் வரவுக்காகவும்..!!
அவள் வந்தாள்..!
பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த யாரையும் அவள் லட்சியம் பண்ணவில்லை. நேராக அவனிடம் வந்தாள்.!
” காலை வணக்கம்..ம்ப்பா..! இண்டர்வியூக்கு கெளம்பியாச்சா..?” அடர்த்திப் பச்சையில் புடவை கட்டியிருந்தாள். அழகாக இருந்தாள்.
” ஆச்சு..” என்றான். புண்ணகை காட்டி. .!
” பெஸ்ட் ஆப் லக்..! நம்பிக்கையை தளறவிடாதிங்க”
” இருந்தாத்தான தளறவிட..?”
” வசனமா…?”சிரித்து”வாங்க காபி சாப்பிடலாம் ”
” உன் பஸ் வந்துருமே..?”
” போகட்டும்… காசு குடுத்து போறேன்..! கம்பெனி பஸ்லயேதான் போகனுமா..என்ன. .?!”
அவளுடன் நடந்தான்.
வழக்கம் போலவே இன்றும் அவள் தலையில் ஒரு ஒற்றை ரோஜா இருந்தது.! அவள் புடவையிலிருந்து ஒரு சுகந்தமான மணம் வீசியதை.. அவளை உரசிக் கொண்டு நடக்கையில்..சுவாசித்தான்.
அவர்களுக்குப் பரிச்சயமான அந்த ஓட்டல்.. அதிக கூட்டமின்றி இருந்தது..! பேமிலி ருமில். . கடைசி டேபிளில் போய் உட்கார்ந்து கொண்டனர்.!
” என்ன சொல்லட்டும் பூவு..?” எதிரெதிரே உட்கார்ந்ததும் கேட்டாள் சத்யா.
” ஐ லவ் யூ..!!” என்றான்.
” அய்யே..! என்னமோ.. இதுதான்.. மொத சந்திப்பு மாதிரி. ..”
” ஐ.. லவ் யூ.. சொல்லச் சொன்னேன். ”
” அது.. எல் கே ஜி லவ்வர்ஸ்க்கு..! நாம பி எச் டி பண்ணப்போறோம்..! குடிக்க..?”
” உன் லிப்ஸ்..”
” என் அன்பான பன்னி..” செல்லமாகத் திட்டினாள்.
” தரமாட்டியா..என்ன. .?”
” உங்களுத கேக்கணுமா..என்ன.? ஆனா. . இங்க முடியாது. .!”
”நன்றி.. சொன்னா திட்டுவ..”
புண்ணகைத்தாள் ”நேத்து என்னால தூங்கவே முடியல.”
” ஏன்…?” எனக் கேட்டபோது.. சர்வர் வந்து நின்றான்.
” சாப்டீங்களா.. வீட்ல..?”
” என்னைவா..?” என்றான்.
” அப்பறம் யாரை..?”சர்வரைப் பார்த்து..” நீங்க சாப்டிங்களா.. பிரதர். .?” எனக் கேட்டாள்.
சர்வர் சங்கோஜமாகச் சிரித்தான்.
” மேடம் நான் சர்வர்..!”
” ஏன்… சர்வர்க்கெல்லாம் பசிக்காதா..?”
” தேங்கஸ் மேடம். ! என்ன ஆர்டர் பண்றது..?”
” ஒரு பொங்கல்.. ரெண்டு வடை..! கடைசியா.. ரெண்டு காபி. .”
சர்வர் புன்சிரிப்புடன் நகர்ந்தான் பூவரசு அவளைக் கேட்டான்.
” உனக்கு. .?”
” காபி..!”
” நேத்து. . தூங்கலேனு சொன்னியே… ஏன். .?”
கண்ணங்கள் குறுக்கச் சிரித்தாள். சுற்றிலும் பார்த்துவிட்டு. .தாழ்வான குரலில் சொன்னாள்.
”ஒரே விரகம்..”
புண்ணகைத்தான்.!
ஆர்வமாக அவனைப் பார்த்துக் கொண்டே சொன்னாள்.
” ரொம்ப ஜாலியா இருந்துச்சி.. ‘ஏ’ ட்ரீம்ஸ் எல்லாம் நெறையக் கண்டேன். ஒரே ரொமான்ஸ்தான்..”
” கல்யாண ஆசை வந்துருச்சா?”
”ஆமாம் போலத்தான் இருக்கு ”
” பண்ணிக்கோயேன் ”
சர்வர்.. ஆர்டர் ஐட்டங்களைக் கொண்டுவந்து. . வைத்தான்.!
அவன் சாப்பிட்டான். அவள் காபி குடித்தாள். பில்லுக்கு பணம் கொடுத்தாள்.!
வெளியேறினார்கள்.!!

” பணமிருக்கா..?” அவனோடு நடந்தபோது கேட்டாள்.
” ஏன். .?”
” கை.. செலவுக்கு. ..?”
” எனக்கென்ன செலவு. ?” என்றான் அவளைப் பார்க்காமல்.
” சிகரெட்… பாக்கு..?”
”புதுசா பழக… விருப்பமில்ல..”
” நீங்கள்ளாம்… ஒரு. .. வாலிபன்.? ” சிரித்தாள்.
” முத்தம் தர்றப்ப.. நீ.. அவஸ்தை படக்கூடாதுன்ற.. நல்லெண்ணம்தான்..”
” இல்லப்பா.. எனக்கு. . அவஸ்தைல்லாம் இல்ல. .”
” நல்ல பையன நீயே கெடுத்துருவ போலிருக்கு..?”
சிரித்து விட்டு. . அவன் சட்டைப் பாக்கெட்டில். .நூறு ரூபாய் பணத்தைத் திணித்தாள்.

” என்கிட்ட வாங்கறத.. கவுரக் கொறைச்சலா நெனைக்க வேண்டாம் ” என்றாள்.
” உன்கிட்ட நான் கவுரவம் பாக்றதில்ல சத்யா. .!”
பேருந்து நிறுத்தம் போனதும். . அவளுக்கு பேருந்து வந்தது.
” சாயந்திரம் பாக்கலாம் ” என ஓடிப்போய் பேருந்தில் ஏறினாள். !
கண்ணிலிருந்து மறையும் வரை… அந்தப் பேருந்தையே பார்த்தான் பூவரசு.!!

பூமி.. வெட்கப் பட்டு… முகம் திருப்பிக் கொண்ட மாலை..!! சூரியன் முகம் வாடியிருந்தான்.!
அதே பூங்கா..! அதே இடம்..! அதே காதலன்..! காத்திருந்தான் அதே காதலிக்காக..!!
” ஸாரி. .” யோடு வந்தாள்.
சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு. .கால்களிலிருந்த செருப்பை ஓரமாகக் கழட்டிவிட்டு… அவனருகில் உட்கார்ந்தாள்.! தோள் பையைத் தோளிலிருந்து கழற்றி. .. புல் தரையில் வைத்தாள்.
அவனோ… அமைதியாக அவள் அழகை ரசித்தான். அவளது இளமையின் வனப்பு… அவனைப் பூரிக்கச் செய்தது.!
‘எத்தனை அழகான… இளமைக் காதலி.. எனக்கு. .!! ஆனால்… நான் அவளுக்கேற்றவனாக இல்லையே..!’

” இண்டர்வியூ.. என்னாச்சு..?” அவன் எணண ஓட்டத்தைக் கலைத்தாள்.
” வழக்கம் போல..” என்றான்.
” நம்பிக்கை இல்லையா..?” அவன் கண்களைப் பார்த்தாள்.
” சுத்தமா இல்ல. .”
ஆறுதல் வார்த்தகைளைச் சொல்ல… நினைத்தாள்.
” நம்பிக்கைதானே வாழ்க்கை.. அதுவே இல்லேன்னா எப்படி.?”
” நம்பிக்கைதான் வாழ்க்கையா?” இடது கையை நிலத்தில் ஊன்றி… தோளை அவள் தோளில் சாய்த்தான்.
” நிச்சயமா…” என்றாள்.
”நிச்சயமா இல்ல. .” என்றான் திடமாக.
அவனைப் பார்த்தாள்.
அவனே..” நிஜம்..! நிஜம்.. வாழ்க்கை இல்லையா..?” எனக் கேட்டான்.
” நிஜம்தான்..” ஒப்புக்கொண்டாள்.”ஆனா. . நம்பிக்கைதானே… உயிர் வாழ்தலோட… அடிப்படை..?”
” நான். . ஒத்துக்க மாட்டேன்..” என்றான்.. தன் வாதத்தைத் தொடர்வது போல”உயிர் வாழ்றது.. நம்பிக்கையோட அடிப்படைல இல்ல. . ! நாம அப்படி நெனச்சு. . நம்மை நாமே ஏமாத்திட்டிருக்கோம்.”
” அப்றம்…?” ஆர்வமாக அவன் முகம் பார்த்தாள். அவளைப் பொறுத்தவரை.. அது வாதம் அல்ல… அவனைப் பேசவைத்து. . அதைக் கேட்க வேண்டும்.!
பூவரசு ” நாம வாழறது.. நம்பிக்கையோட அடிப்படையில இல்லை. .! ஆசைகளோட அடிப்படையில” என்றான்.
அவள் மறுக்கவில்லை. அவனை ஆழமாகப் பார்த்தாள்!
மெல்லிய குரலில் தொடர்ந்தான் பூவரசு.
” இப்பெல்லாம் நான் கற்பனைல வாழறதை விட்டுட்டேன்.. சத்யா. ! நிஜம்தான் என் கண்ணுக்கு தெரியுது..! என்னிக்கோ….நடக்கற.. அல்லது நடக்காத.. கற்பனைகளுக்காக.. இந்த நிமிச நிஜத்தை நான் இழக்க விரும்பல..”
” அப்ப. .. வேலை. .?”
” கீதை பாலிசிதான்.. கடமையைச் செய்… பலனை எதிர்பாராதே..! இண்டர்வியூக்கு போகவேண்டியது என்னோட கடமை.! மத்தபடி.. வேலை கெடைக்குமா…கெடைக்காதான்றது.. தேவையில்லாத கற்பனை.! அதனால என்ன மனவேதணைதான் மிஞ்சும். .” அவனது விரக்தியான மனநிலை.. அவளையும் வருத்தியது.!
அவன் கை விரல்களைக் கோர்த்தாள்.!
” சரி.. விடுங்க..!!”
” உண்மை சத்யா. .! நான் கனவுல வாழ விரும்பல.. முடிஞ்சவரை எதார்த்தத்துல வாழ விரும்பறேன். ! இந்த நிமிசம் நீ என்னோட ஆருயிர் காதலின்றது நிஜம்..! இதே நாளைக்கு நீ… இன்னொருத்தனோட… இல்லத்தரசியாக்கூட மாறலாம்.! அப்படி ஒண்ண நெனச்சு….இந்த நிமிச காதலை நான் இழக்க.. விரும்பல..” என்றான்.
அவனிடமிருந்து. . இந்த விதமான கூற்றை அவள் எதிர்பார்க்கவில்லை. அவனது பேச்சில்.. அவள் உள்ளம் புண்பட்டது.!
” இடியாட்டிக்..” என்றாள். சற்று முறைப்பாக.!
அவளது முறைப்பைப் பொருட்ப்படுத்தாமலே சொன்னான்.
” இவ்ளோ நாளும் நான். . கடந்த காலத்துலயோ.. இல்ல எதிர்காலத்துலயோதான் வாழ்ந்துட்டிருக்கேன்.. பலன்..? மனசு முழுக்க ரணம். .! இனிமேலாவது நிகழ்கால அனுபவத்தை உணரனும் ”
அவன் பேச்சைக் கேட்டு… தன் முறைப்பை அவளே அலட்சியப் படுத்திவிட்டு.. அவன் கையைப் பிடித்தாள் !!
” உங்களுக்கொரு நல்ல ஜாப் கண்டிப்பா கெடைக்கும்ப்பா..! அதுவரை நான் காத்திட்டிருப்பேன்.”
அவள் தலைப் பக்கம் முகத்தை நகர்த்தி. . அவளது கூந்தலில் இருந்த வாடிய ரோஜாவின் நறுமணத்தை ஆழமாக முகர்ந்தான்.! அதன் சுகத்தில் திளைப்பவன் போல… கண்களை மூடினான்.!
அவன் கையை எடுத்து தன் கண்ணத்தில் வைத்துக் கொண்டு கேட்டாள் சத்யா. !
” கல்யாணம் பண்ணிக்கலாமா?”
” பண்ணிட்டு. .? உனக்கு பேன் பாக்கறதா..?”
” பாருங்களேன் என்ன தப்பு. .?” எனச் சிரித்தாள் சத்யா !!!

– வரும். ..!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments