அன்புள்ள ராட்சசி – பகுதி 46

“ம்ம்.. அ..அவன் பேர் தெரியாது சரி.. ஆள் பாக்குறதுக்கு எப்படி இருப்பான்னு கொஞ்சம் சொல்ல முடியுமா..??”

“கருப்பா.. குண்டா.. கொஞ்சம் குள்ளமா இருப்பான்.. சுருட்டை முடி..!! இந்த எடத்துல ஒரு வெட்டுக்காயமோ, தீக்காயமோ..!! அவனுக்கு ஏதோ நரம்புத்தளர்ச்சின்னு நெனைக்கிறேன்.. பேசுறப்போ அடிக்கடி வாய் ஒருமாதிரி கோணிக்கும்.. பல்லுலாம் கறையா இருக்கும்.. பாத்தாலே அப்படியே வெறுப்பா இருக்கும்..!!”

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

நிர்மலா ஒருவித வெறுப்புடனே சொல்லிமுடிக்க, ஸ்ரீனிவாச பிரசாத் இப்போது வாசல் பக்கம் திரும்பினார். இதழில் கசிகிற ஒரு புன்னகையுடன் கனகராஜனை கேட்டார்.

“யார்ன்னு தெரியுதா கனகு..??”

“ந..நம்ம.. நெற்குன்றம் காசியா இருக்குமோன்னு தோணுது ஸார்..!!”

“சந்தேகமே வேணாம்.. அவனேதான்..!! அம்பதுக்கும் நூறுக்கும் பொட்டலம் போட்டுட்டு இருந்த நாயி.. ‘Coke peddling’ பண்ற அளவுக்கு பெரிய ஆளாயிட்டான் பாத்தியா..?? த்தா.. கைல மாட்டட்டும்..!!” கருவிய ஸ்ரீனிவாச பிரசாத், மீண்டும் நிர்மலாவின் பக்கம் திரும்பிக் கொண்டார்.

“நீங்க சொல்ற ஆளு பேரு காசி..!! அவன் மேல ஏற்கனவே நாலஞ்சு கேஸ் இருக்குது.. போலீஸ்க்கே டிமிக்கி குடுத்துட்டு திரியிறவன்..!!”

“ம்ம்..!!”

“ஹ்ம்ம்… எதுக்கும்.. அவனோட ஃபோட்டோவை அப்புறம் வந்து காட்ட சொல்றேன்.. நீங்க ஒருதடவை பார்த்து அவன்தானான்னு கன்ஃபார்ம் பண்ணிருங்க.. சரியா..??”

“ஷ்யூர்..!! ம்ம்ம்ம்… அப்படினா.. அ..அந்த போதை மருந்துதான் அவர் உயிர் போனதுக்கு காரணமா..??”

“அது போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தப்புறந்தான் தெரியும்..!!”

“ஓ..!!”

“அதுக்கு முன்னாடி.. எனக்கு இன்னும் சில விஷயங்கள் க்ளியர் பண்ணிக்கணும்..!!”

“கேளுங்க..!!”

“ம்ம்ம்… நேத்து நைட்.. வீட்ல யாரார்லாம் இருந்தீங்க..??”

“நான்.. அவர்.. அப்புறம் சுஜி.. மூணு பேர்தான்..!! அவர் வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்துலயே.. வேலைக்காரியும் ட்ரைவரும் கெளம்பிட்டாங்க..!!”

“அவரை கடைசியா எப்போ உயிரோட பாத்தீங்க..??”

“நேத்து நைட்டு..!!”

“அதான் எப்போ..??”

“அ..அந்த ஆள்ட்ட பேசிட்டு.. அப்புறம் அந்த ரூமுக்குள்ள போனாரு.. அதுதான் கடைசி..!!”

“அப்போ டைம் என்ன இருக்கும்..??”

“எட்டு மணி இருக்கும்..!!”

“ம்ம்.. நைட்டு எட்டு மணிக்கு உள்ள போயிருக்காரு.. மிட்னைட்க்குள்ள அவர் உயிர் போயிருக்கனும்..!! காலைல எட்டு மணிக்கு.. கார் ட்ரைவர் வந்து பாத்துத்தான்.. அவர் இறந்து போன விஷயம் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு..!! அப்படித்தான..??” ஸ்ரீனிவாச பிரசாத் கேட்டுக்கொண்டிருக்க.. இடையில் புகுந்த சுஜி..

“யாரு மம்மி எறந்து போயிட்டாங்க..??”

என்று மழலைக்குரலில் அம்மாவிடம் கேட்டாள்..!! உடனே.. அறையில் இருந்த மற்ற நால்வரும்.. முகத்தில் ஒருவித திகைப்புடன் அந்தக் குழந்தையை ஏறிட்டனர்..!! அந்த மாதிரி ஒரு சூழ்நிலையை சந்திப்பது.. அதுவே அவர்களுக்கு முதல்முறை..!! ஒரு சில வினாடிகள் அமைதிக்கு பிறகு.. பதிலேதும் சொல்லாமல்.. பால்சாதத்தாலே மகளின் வாயை அடைத்தாள் நிர்மலா..!! பிறகு.. ஸ்ரீனிவாச பிரசாத்திடம் திரும்பி சொன்னாள்..!!

“ஆ..ஆமாம்..!!”

“ம்ம்.. காலைல வரைக்கும்.. அவரை போய் பாக்கணும்னு உங்களுக்கு தோணலையா..??”

“இல்ல..!!”

“ஏன்..??”

“அவருக்கு அந்த மாதிரி டிஸ்டர்ப் பண்றது பிடிக்காது..!! முக்கியமா.. அவர் அந்த ரூமுக்குள்ள போறப்போலாம்..!!”

“ஹ்ம்ம்..!! அந்த ரூம்கதவு வெளிப்பக்கமா லாக் ஆகிருந்ததா ட்ரைவர் சொன்னான்..!! ரூமுக்குள்ள இருந்துக்கிட்டு.. கண்டிப்பா உங்க ஹஸ்பண்டால அதை பண்ணிருக்க முடியாது.. சுஜியும் அந்த அளவுக்கு ஹைட்லாம் கிடையாது..!!” ஸ்ரீனிவாச பிரசாத் சுற்றி வளைக்க,

“நான்தான் லாக் பண்ணினேன்..!! நேத்து நைட்டு அவர் அந்த ரூமுக்குள்ள போன கொஞ்ச நேரத்துல.. நானேதான் கதவை வெளிப்பக்கமா லாக் பண்ணினேன்..!!” நிர்மலா நேரடியாகவே விஷயத்துக்கு வந்தாள்.

“ஏன்..??”

“அ..அது.. ஸம்டைம்ஸ் நான் அந்த மாதிரி பண்ணுவேன்.. இல்லனா அவரை கண்ட்ரோல் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கும்..!! அதுவும்.. முக்கியமா.. அவர் அந்த ரூமுக்குள்ள போறப்போலாம்..!!”

“ஓ..!!”

“அதும் இல்லாம.. நேத்து.. என் மேல அவர் ரொம்ப கோவத்துல வேற இருந்தாரு.. அதான்..!!”

எந்த ஒரு படபடப்பும் இல்லாமல்.. நிர்மலா நிதானமாக பதில் சொன்னாள்.. பதில் சொன்னதோடு மட்டுமல்லாது, மகளுக்கு அவ்வப்போது பால்சாதம் ஊட்டுகிற கவனமும் அவளிடம் இருந்து சிதறவில்லை..!! ஸ்ரீனிவாச பிரசாத் சில வினாடிகள் அவளையே கூர்மையாக பார்த்தார்.. அந்த கூர்மையான பார்வையில் ஒருவித குறுகுறுப்பும் கலந்திருந்தது..!!

“உங்ககிட்ட இன்னொன்னு கேக்கணும்..!!”

“என்ன..??”

“அவருக்கு கார்டியாக் அரஸ்ட் மாதிரி இருக்குது..!! கண்டிப்பா.. ரொம்ப வேதனைக்கு அப்புறந்தான் அவரோட உயிர் பிரிஞ்சிருக்கணும்.. வலில துடிச்சிருக்கணும்.. சத்தம் போட்ருக்கணும்.. கத்திருக்கணும்..!!” சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத் சற்று நிறுத்தி,

“நீங்க போய் அவரை பாக்கலையா..?? ஐ மீன்.. அவர் சத்தம் போட்டது உங்களுக்கு கேக்கலையா..??” என்று குதர்க்கமாக கேட்டார்.

“இல்ல.. நான் போய் பாக்கலை..!! ஐ மீன்..அவர் சத்தம் போட்டது எனக்கு கேக்கலை..!!”

குதர்க்கமான கேள்விக்கு, நிர்மலாவும் குதர்க்கமாகவே பத்தி சொல்ல.. இதழில் அரும்பிய ஒரு மெலிதான புன்னகையை, ஸ்ரீனிவாச பிரசாத்தால் தவிர்க்க முடியவில்லை.. புன்னகைத்தார்..!!

“ஏன் சிரிக்கிறீங்க..??”

“நத்திங்..!!”

“என் மேல சந்தேகப்படுறீங்களா.. அவரோட சாவுக்கு நான் காரணமா இருந்திருப்பேன்னு..??”

“ம்ம்ம்ம்.. அப்படி சொல்லமுடியாது..!!”

“அப்புறம்..??”

“சந்தேகம்னு இல்ல.. பட்.. மனசுல சின்னதா ஒரு உறுத்தல்..!! போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வர்ற வரை அந்த உறுத்தல் இருந்துட்டேதான் இருக்கும்..!!”

“ஓ..!! அது என்ன உறுத்தல்னு நான் தெரிஞ்சுக்கலாமா..??”

“ஹ்ம்ம்.. எப்படி சொல்றது.. சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..??”

“இல்ல.. சொல்லுங்க..!!”

“நான் இந்தமாதிரி நெறைய சாவு பாத்திருக்கேன் மிசஸ் நிர்மலா.. அதே மாதிரி.. செத்துப்போன ஆளுங்களோட பொண்டாடிங்கள்லாம்.. எந்த மாதிரி ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்க, அழுது ஒப்பாரி வைப்பாங்கன்னும் பாத்திருக்கேன்..!! ஆனா நீங்க.. You are different..!! புருஷன் போயிட்டாரேன்ற அதிர்ச்சியோ, துக்கமோ, கவலையோ.. துளியூண்டு கூட உங்ககிட்ட இல்ல.. ஏன் அப்படி..?? You are so Cool, Calm And Collected..!!! அதுதான் அந்த உறுத்தல்..!!”

ஸ்ரீனிவாச பிரசாத் கேட்ட அந்த கேள்வி.. அசோக்கிற்கும், கனகராஜனுக்குமே அவரவர் மனதில் இருந்தது..!! இப்போது அவர் அந்த கேள்வியை கேட்டதும்.. அவர்களுமே.. ‘என்ன பதில் சொல்லப் போகிறாள்’ என்பது மாதிரியான ஒரு ஆர்வத்துடன் நிர்மலாவை பார்த்தனர்..!! நிர்மலா சில வினாடிகள் எதுவும் பேசவில்லை.. கேள்வி கேட்ட ஸ்ரீனிவாச பிரசாத்தின் முகத்தையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள்..!!

பிறகு என்ன நினைத்தாளோ.. மடியில் அமர்ந்திருந்த தனது மகளிடம் திரும்பினாள்.. அவளது வாயைச்சுற்றி அப்பியிருந்த சாதத்துணுக்குகளை, புடவைத்தலைப்பால் சுத்தம் செய்தாள்..!! அவர்கள் பேசிக்கொண்ட விஷயத்தை அரைகுறையாக புரிந்துகொண்டு.. குழப்பம் அப்பிய கண்களுடன் மருட்சியாக பார்த்துக்கொண்டிருந்த மகளிடம்.. மெல்லிய குரலில் சொன்னாள்..!!

“சுஜிக்குட்டிக்கு ஒரு விஷயம் தெரியுமா..??”

“தெரியாதே..!!”

“டாடி.. செத்துப் போயிட்டாரு..!!”

“நம்ம டாடியா..??”

“ம்ம்..!!”

“நெஜமா..??”

“நெஜமா..!!”

“அப்போ டாடி இனிமே நம்மள அடிக்க மாட்டாரா..??”

“அடிக்க மாட்டாரு..!!”

“ஹையா..!! ஜாலி..!!!”

பால்நிற பற்கள் பளீரிட சுஜி சந்தோஷத்தில் குதுகலித்தாள்.. ஆண்கள் மூவரும் அப்படியே அதிர்ந்து போய் அவளை பார்த்தார்கள்..!! அப்பா இறந்த செய்தியைக் கேட்டு ஒரு குழந்தை ஆனந்தம் அடைகிறது என்றால்.. ‘எப்படிப்பட்ட மோசமான ஒரு மனிதனாக அவன் இருந்திருப்பான்’ என்று.. உடனடியாக அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது..!! ஒரு வேதனையான உணர்வு அவர்களது இதயத்தை பிசைவதை அவர்களால் உணர முடிந்தது..!!

நிர்மலா மகளிடம் இருந்து பார்வையை விலக்கி.. ஸ்ரீனிவாச பிரசாத்தை ஏறிட்டாள்..!! அவளுடைய கண்கள் இப்போது சற்றே கலங்கிப்போய் பளபளத்தன.. அந்த கலங்கிய கண்களை இமைகளால் இடுக்கி.. மிகக்கூர்மையாக அவரை ஒரு பார்வை பார்த்தாள்.. ஒருவித இறுக்கமும், விரக்தியும் கலந்த மாதிரியான குரலில் கேட்டாள்..!!

“வேற ஏதாவது கேக்கணுமா..??”

உண்மையில்.. ஸ்ரீனிவாச பிரசாத் நிர்மலாவிடம் இன்னும் சில கேள்விகள் கேட்க எண்ணியிருந்தார்.. ஆனால் அந்த கேள்விகள் எல்லாம் இப்போது அவரது நினைவடுக்கிலிருந்து தொலைந்து போயிருந்தன..!! குழந்தையின் குதுகலத்தில் ஒருவித திகைப்புக்கு சென்றிருந்தவர்.. அந்த திகைப்பு மாறாமலேயே..

“இ..இல்ல.. வேற ஒன்னும் இல்ல..!!” என்று தடுமாற்றமாக சொன்னவாறு, சேரில் இருந்து எழுந்துகொண்டார்.

அறையை விட்டு வெளியே வந்த ஒரு சில நிமிடங்களிலேயே.. ஸ்ரீனிவாச பிரசாத் அந்த தடுமாற்றத்தை உதறியிருந்தார்.. மீண்டும் பரபரப்புடன் பணியில் ஈடுபட ஆரம்பித்திருந்தார்..!! அசோக்கிடம் தனித்து பேசுவதற்கு.. அதன்பிறகும் ஐந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டார்..!! அடுத்த அறைக்கு சென்றவர், அங்கிருந்த தடயவியல் குழுவிடம், மேலும் சில உத்தரவுகள் பிறப்பித்தார்.. கார் ட்ரைவரை வரவழைத்து, ஏதோ ஒரு சந்தேகம் தீர்த்துக்கொண்டார்.. ‘வேன் எங்கே’ என்று கேட்டு, கனகராஜனை மீண்டும் டென்ஷன் ஆக்கினார்.. செல்ஃபோனில் யாரையோ அழைத்து, கெட்ட வார்த்தையில் திட்டினார்..!!

சுஜி தந்த அதிர்வில் இருந்து மீள்வதற்கு.. அசோக்கிற்கும் அந்த ஐந்து நிமிட நேரம் அவசியமாக இருந்தது..!! அறையை விட்டு வெளியே வந்தபிறகும்.. அந்தக்குழந்தையின் வெள்ளைச்சிரிப்பே.. திரும்ப திரும்ப அவன் மனதில் தோன்றிக் கொண்டிருந்தது..!! பொறுப்பற்ற தேவராஜ் மாதிரியான ஆட்கள் மீதும்.. பணம் சேர்ப்பதற்காக, பல குடும்பங்களது உளநிம்மதியில் உலைவைக்கிற காசி மாதிரியான ஆட்கள் மீதும்.. கடுங்கோபம் பிறந்தது அவனுக்கு..!! சுஜி பற்றிய நினைவுடனே.. ஸ்ரீனிவாச பிரசாத் பணியாற்றும் விதத்தை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்..!!

ஐந்து நிமிடங்கள் கரைந்து போயிருந்த வேளையில்.. வீட்டு வாசலில் DEVARAJ – IN என்று காட்டிக் கொண்டிருந்த, மரத்தாலான பெயர்ப்பலகையின் கைப்பிடியை பற்றி இழுத்து.. DEVARAJ – OUT என்று காட்டுமாறு அதை அசோக் மாற்றிக்கொண்டிருந்த நேரத்தில்.. அவனுக்கு பின்பக்கமாக வந்த ஸ்ரீனிவாச பிரசாத்.. மெலிதாக அவனது தோளை தட்டினார்..!!

“வா அசோக்..!!”

என்று சொல்லிவிட்டு அவனுக்காக காத்திராமல்.. விடுவிடுவென முன்னால் நடந்தார்.. வீட்டை விட்டு வெளியேறினார்..!! உடனடியாய் சுறுசுறுப்பான அசோக்கும்.. வாசலில் நிரம்பியிருந்த கும்பலுக்குள் புகுந்து.. நெருக்கமாக அவரை பின்தொடர்ந்தான்..!!

“ஸ்டேஷனுக்கே போயிட்டியா..??”

“இல்ல ஸார்.. போற வழிலேயே உங்க கால் வந்துடுச்சு.. நேரா இங்க வந்துட்டேன்..!! எ..என்ன விஷயம் ஸார்.. எதுக்கு வர சொன்னீங்க..??”

“வா சொல்றேன்..!!”

மரநிழலில் நின்றிருந்த போலீஸ் ஜீப்பை நோக்கி ஸ்ரீனிவாச பிரசாத் நடந்தார்..!! ஜீப்பை அடைந்ததும்.. சற்றே குனிந்து.. டேஷ்போர்டில் இருந்து சிகரெட் பாக்கெட்டையும், லைட்டரையும் எடுத்தார்..!!

“தம்மடிக்கிறியா..??” சிகரெட் பாக்கெட்டை அசோக்கிடம் நீட்டினார்.

“இ..இல்ல ஸார்.. வேணாம்..!!”

அசோக் மறுத்துவிட.. ஸ்ரீனிவாச பிரசாத் மட்டும் ஒரு சிகரெட் உருவி பற்ற வைத்துக் கொண்டார்.. வாகனத்தின் மீது வசதியாக சாய்ந்து கொண்டார்..!! புகையை மிக ஆழமாக நுரையீரலுக்குள் இழுத்தார்.. பிறகு.. குபுகுபுவென உள்ளிழுத்த புகையை வெளியே ஊதியவாறே சலிப்பாக சொன்னார்..!!

“ப்ச்.. காலங்காத்தாலேயே இப்படி எழவு விழும்னு நெனச்சே பாக்கல..!! எப்படியும் இன்னும் நாலஞ்சு நாளைக்கு என் தாலிய அறுத்துருவானுக.. நின்னு பேசக்கூட எனக்கு நேரம் இருக்காது.. அதான் உன்னை இங்கயே வரசொல்லிட்டேன்..!! ரொம்ப வெயிட் பண்ண வச்சுட்டனா..??”

“பரவால ஸார்..!!”

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments