♥நீ -80♥

குணாவுக்கு.. உன்னைப் பற்றி எப்போதோ தெரியும்..! ஆனால் இப்போதுதான் கேட்கிறான்..! இது.. நட்பைத்தாண்டிய விசயம்..! அவன் தங்கையின் வாழ்க்கைப் பிரச்சினை..!! அவன் கேள்விக்கு.. நான் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்..!!

” நிலாகிட்ட.. நீ.. இவளப் பத்தி..என்ன சொல்லி வெச்சிருக்க..?” என்று அவனே கேட்டான்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

மெதுவாக அவனைப் பார்த்து.. ”எல்லாமே சொல்லிட்டேன்..” என்றேன்.

” என்ன..?”

”நிலாக்கு.. இவளப் பத்தி.. எல்லாமே தெரியும்..!”

”என்னடா… சொல்ற..?” அவன் திகைப்பானான்.

”ம்…! நானே.சொல்லிட்டேன்..! எதையும் மறைக்கல…!”

” நீ… அவகூட.. இருக்கறது..? அவ எப்படிப்பட்டவங்கறது…?”

”ம்..ம்ம்..! எல்லாம்..!!”

”நிலா… எதுவும் சண்டை போடலியா..?”

” ம்கூம்..”

” நெஜமாவா..?”

”ம்…ம்ம்..! எனக்கே ஆச்சரியம்தான்…!!” என நான் சிரிக்க…

குணா என்ன சொல்வதெனப்புரியாமல் தடுமாறினான்.
”இருந்தாலும்.. நீ.. இப்படி பண்றது..?”

” என்னாலகூட.. அவள புரிஞ்சுக்க முடியல..” என்றேன்.
”என்னடா… சொல்ற..?”

” இல்ல.. என்மேல.. அத்தனை லவ் இருக்கறவ.. எப்படி இந்த விசயத்த சாதாரணமா எடுத்துக்கறான்னுதான் எனக்கும் புரியல…! என்னவிதமான.. சைக்காலஜி இது..?”

”உங்க ரெண்டுபேருக்கும் நடூல…மனஸ்தாபம் எதுவுமில்லையே..?” என்று கேட்டான்.

” ம்கூம்..!! அப்படி எதுவும் இல்ல..!!”

” நீங்க சந்தோசமா இருந்தா போதுண்டா…”

”அதுக்கு குறைவே இல்ல..!!” என்றதும்…

குணா அமைதியாகி விட்டான். அதன் பிறகு அதைப்பற்றி.. அவன் பேசவில்லை..! அவன் முகமும் கொஞ்சம் இருக்கமாகி விட்டது..!
ஒருவேளை… என்மேல் அத்தனை ஆத்திரமோ..??

நீ.. உடல்தேறி.. வீட்டிற்கு அனுப்பப்பட்டாய்..! உன்னை காரில் அழைத்துப் போனேன்.
உன் வீட்டின் முன் காரை நிறுத்த.. தன் வீட்டுக்குள் இருந்து வெளியே வந்தாள் தீபா.

”வந்துட்டிங்களா…?” என்று சிரித்தாள்.

நான் சிரித்து ”நீ எப்ப.. வந்த..?” என்று கேட்டேன்.

” இப்ப.. கொஞ்ச நேரம் முன்னாடிதாஙக வந்தேன்..! அப்றமா நானே பாக்க வரலாம்னு இருந்தேன்..! அதுக்குள்ள… இவளே வந்துட்டா…”

நீங்கள் இருவரும்.. பரஸ்பர நலன் விசாரித்துக்கொண்டு.. உன் வீட்டுக்குள் போக.. அதை ஒரு சிலர் வேடிக்கை பார்த்தனர்..!
என்னையும் உள்ளே அழைத்து உட்கார வைத்த தீபா.. என்னிடம் கேட்டாள்.
”அக்கா.. நல்லாருக்குங்களா..?”

” ம்..ம்ம்..! நீ எப்படி..?”
புதுப்புடவையில் இருந்தாள்.
பூரணத்துவம் பெற்ற.. பெண்மையின் பூரித்த முகம்..! அதில் நிறைந்த புன்னகை..! புது தாலிக்கயிறு.. கை நிறைய கண்ணாடி வளையல்கள்..! காலில் கொலுசின் சிணுங்கல்.. கால் விரலில் மெட்டி…!!

”எனக்கென்னங்க..? என்ன.. இந்த மாதிரி நேரத்துல.. இவகூட இருக்க முடியலயேங்கறதுதான்…வருத்தம்..!” என்றாள்.

” நீ.. வருத்தப்பட ஒன்னுமே இல்ல..!”

நீ குறுககிட்டு.. ” இவங்களும்.. அக்காவும் என்னை ரொம்ப நல்லாவே பாத்துட்டாங்க ..” என்றாய்.

”எந்தக்கா…?”

” ஏய்… இவங்க சம்சாரம்டி..” என நீ சொல்ல…

சடக்கெனத் திரும்பி என்னைப் பார்த்தாள் தீபா.
” அப்படிங்களா…?”

” ம்.. ம்ம்…” என நான் புன்னகைத்தன்.

”உன்கிட்ட நெறைய சொல்லனும்..! அதெல்லாம் நாம அப்றம் பேசிக்கலாம்..!!” என நீ தீபாவிடம் சொன்னாய்.

நான் தீபாவைக் கேட்டேன்.
”அழைப்பெல்லாம் முடிஞ்சுதா..தீபா..?”

”ஓ..! எல்லாமே.. முடிஞ்சுதுங்க. .”

” மறுபடி .. எப்ப போவ..?”

”எங்கீங்க..?”

” ஊருக்கு..?”

”ஒரு ரெண்டு நாள்.. இருந்துட்டு.. போவங்க..?”

” சரி.. போறவரை இவளை கொஞ்சம் கவனிச்சிக்க.. ஆபரேசன் பண்ணின ஒடம்பு…”

”அதப்பத்தி.. நீங்க கவலையே படாதிங்க..! அதெல்லாம் இவ ரொம்ப நல்லா பாத்துக்குவா..!” என நீ என்னிடம் சொன்னாய்.

அதேநேரம்.. என் கைபேசி அழைத்தது. எடுத்துப் பார்த்தேன்.
நித்யா…!

”ஹலோ..?” என்றேன்.

”அண்ணா.. நான்தான் நித்தி..”

”ஆ..! சொல்லு நித்தி..?”

” இப்ப எங்க இருக்கீங்க..?”

” லோக்கல்லதான்..! ஏன் நித்தி..?”

”நிலாக்கு வலி வந்துருச்சு..! சீக்கிரம் வாங்க..” என்றாள்

” அப்படியா..! சரி.. இப்ப வரேன்..”

”சீக்கிரம் வாங்க…!”

”குணா இருக்கானா.. பக்கத்துல..?”

” இருக்காருண்ணா… நாங்க ஆஸ்பத்ரி போறோம்..! நீங்க அங்க வந்துருங்க..!!”

”சரி.. சரி..! இப்ப வந்தர்றேன்..!” அவளுடன் பேசி முடித்து.. உன்னைப் பார்த்துச் சொன்னேன் ”சரி.. நீ நல்லா ரெஸ்ட் எடு…! நிலாக்கு வலி வந்துருச்சாம்..! உன்ன நான் அப்றம் வந்து பாக்கறேன்..!”

”ஐயோ.. மொத நீங்க.. அக்காவ போய் பாருங்க..! என்னைப் பத்தி கவலைப்படாதிங்க..!!” என்றாய்.

”சரி.. தீபா.. நான் போறேன்…”

”நீங்க போங்க..! இவள நான் பாத்துக்கறேன்..!” என்றாள் தீபா.

அஙகிருந்து.. நான் உடனே கிளம்பினேன்.!!

நான் ஆஸ்பத்ரி போனபோது.. நிலாவினிமயின் அம்மா.. பயங்கர டென்ஷனோடு இருந்தாள்.
குணா.. நித்யா இருவரிடமும் போய் பேசினேன்.

” எப்படி இருக்கு.. இப்ப. .?”

” உள்ள கொண்டு போயிருக்காங்க..! படு டென்ஷெனா இருக்கு..!” என்றாள் நித்யா.

சில நிமிடங்களிலேயே.. நிலாவினிக்கு அறுவை சிகிச்சை பண்ணவேண்டும்..என கையெழுத்து வாங்கப்பட்டது..!
நிலமை சிக்கல்…!
பயம் அதிகரித்தது..!!

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் குழந்தை பிறந்தது..!
ஆனால் குழந்தைக்கு உயிர் இல்லை..!
‘இது முதல் அதிர்ச்சி..!’

கூடவே இன்னொரு தகவலும் சொல்லப்பட்டது..!
‘இனி நிலாவினியால்.. என்றென்றும் குழந்தை பெற்றுக்கொள்ள.. முடியாது..! காரணம். .. அவள் கர்ப்பப்பை.. அவளது உடம்பிலிருந்து நீக்கப்பட்டது..!!
‘இது அடுத்த அதிர்ச்சி…!!’

– முதல் பாகம்….. முற்றும்….. !!!!!!!

– வணக்கம் நண்பர்களே… இது முதல்பாகத்தின் முடிவுதான்.. அடுத்த பாகம் துவங்கும் முன்.. உங்கள்.. அபிப்ராயங்களைத் தெரிவிக்கலாம்…….!!!!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

Comments