ஆண்மை தவறேல் – பகுதி 30

“நேத்து நைட்டு நான் மேட்ச் பாக்க போகலை.. ஒரு பொண்ணை கூட்டிட்டு கெஸ்ட் ஹவுஸ் போயிருந்தேன்.. லாஸ்ட் மொமன்ட்ல அந்தப்பொண்ணை திருப்பி அனுப்ப வேண்டியாகி போயிடுச்சு..!! ஆனா.. எனக்கு உள்ள இருந்த அந்த செக்ஸுவல் தர்ஸ்ட்.. அது அப்படியேதான் இருந்தது..!! அதோட வீட்டுக்கு வந்து.. உன்னை பாத்ததும்.. என்னையும் அறியாம அந்த செக்ஸுவல் தர்ஸ்ட் வெளிப்பட்டு.. உன்னை கிஸ் பண்ணிட்டேன்..!! சத்தியமா இது நான் ப்ளான் பண்ணி பண்ணலை.. இட் ஜஸ்ட் ஹேப்பன்ட்… லைக் அன் ஆக்ஸிடன்ட்..!! ப்ளீஸ் நந்தினி.. அதை நேத்தோட அப்படியே மறந்திடலாம்.. ஒரு கெட்ட கனவு மாதிரி நெனச்சுக்கோ..!! சரியா..??”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

அசோக் சொல்லி முடிக்க, நந்தினி அப்படியே சப்த நாடியும் ஒடுங்கிப் போனவளாய் நின்றிருந்தாள். அவன் சொன்ன விஷயத்தை இன்னுமே நம்பமுடியாதவளாய் அவனையே பரிதாபமாக பார்த்தாள். அவனது நேற்றைய செய்கைக்கு காதல் என்று அர்த்தம் கற்பித்த தனது அறியாமையை எண்ணி அவளுக்குள் ஒரு சுய பச்சாதாபம். அந்த அறியாமையினால் காலையில் இருந்து அவனிடம் வெக்கங்கெட்டதனமாய் நடந்துகொண்டதை எண்ணி ஒரு வேதனை வேறு அவளை வாட்டியது. சோர்ந்து போனவளாய் அப்படியே மெத்தையில் பொத்தென்று அமர்ந்தாள்.

கொஞ்ச நேரம் அப்படியே தலையை குனிந்தவாறு அமர்ந்திருந்தாள். அவளுடைய மனதுக்குள் ஒரு உணர்ச்சிக்கொந்தளிப்பு..!!! அப்புறம் தனது முகத்தை மெல்ல நிமிர்த்தி அசோக்கை ஏறிட்டாள். அவளுடைய கண்களில் இப்போது பொலபொலவென கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அழுகிற விழிகளுடனே இறுக்கமான குரலில் கேட்டாள்.

“அப்போ.. என்னை கிஸ் பண்ணினது.. என் மேல இருக்குற லவ்னால இல்ல..?”

“இ..இல்ல..!!”

“உங்க செக்ஸ் ஆசையை கட்டுப்படுத்த முடியாம.. அதை என்மேல வந்து கொட்டிட்டீங்க..?” நந்தினியின் கேள்வியில் இருந்த உக்கிரத்தில் அசோக் திகைத்தான்.

“ந..நந்தினி.. நான் சொல்றதை கொஞ்சம்..” அவன் தடுமாற்றமாய் சொல்ல, நந்தினி இப்போது சீறினாள்.

“பேசாதீங்க..!!!! போச்சு.. எல்லாம் போச்சு..!! என் புருஷனுக்கு என் மேல லவ் வந்துடுச்சுன்னு நம்பினேன்.. அந்த நம்பிக்கை போச்சு..!! எனக்கு இனிமே லைஃப்ல எந்தக்குறையுமே இல்லன்னு சந்தோஷப்பட்டேன்.. அந்த சந்தோஷம் போச்சு..!! எல்லாம் போச்சு..!!” என்று புலம்பினாள்.

“நந்தினி ப்ளீஸ்.. சொல்றதை கேளு..!! இ..இது.. இது ஒண்ணுல்ல.. இப்படி நீ பொலம்புற அளவுக்கு.. இப்போ பெருசா எதுவும் ஆயிடலை..??”

“ஓ..!! நடந்தது உங்களுக்கு ஒரு பெரிய விஷயமாவே தோணலைல..?? இது.. ஜஸ்ட் லைக் தட்.. அப்படியா..?? ஆமாம்.. உங்களுக்கு எப்படி அது பெரிய விஷயமா தோணும்..?? டெயிலி ஒருத்தி கூட படுத்து எந்திரிக்கிறவருதான நீங்க..?? உங்களுக்கு இதுலாம் சாதாரணம்தான்..!! சொல்லுங்க.. எத்தனை பேரை இந்த மாதிரி புடிச்சிருக்கீங்க.. ம்ம்ம்..?? நான் எத்தனாவது அந்த லிஸ்ட்ல..?? டபுள் டிஜிட்டா.. ட்ரிபிள் டிஜிட்டா..??” நந்தினி வெடித்து சிதற, அசோக் மிரண்டு போனான்.

“ந..நந்தினி ப்ளீஸ்..” என்றான் கெஞ்சலாக.

நந்தினி அவனுடைய கெஞ்சலை பொருட்படுத்தவில்லை. திடீரென படுக்கையில் இருந்து எழுந்தாள். அந்த அறைக்குள்ளேயே அவளுடைய பொருட்கள் எல்லாம் அடுக்கி வைத்திருக்கும் அலமாரியை நோக்கி சென்றாள். அந்த பொருட்களை எல்லாம் கலைத்து இழுத்து போட்டாள். எதையோ தேடினாள். எதுவுமே புரியாத அசோக் அவளை நெருங்கினான். கவலை தோய்ந்த குரலில் கேட்டான்.

“ந..நந்தினி.. நந்தினி என்ன பண்ற..?”

அவள் அவனுடைய அழைப்பை கண்டுகொள்ளவில்லை. ஒரு அரை நிமிடம் செலவழித்து அவள் தேடியதை கைப்பற்றினாள். கையில் எடுத்ததை அசோக்கின் முகத்தில் விட்டெறிந்தாள். ‘அது என்ன..?’ என்று பார்த்த அசோக் ஒருகணம் குழம்பிப் போனான். அது.. நந்தினியின் புகைப்படம்..!!

“ஏய்.. எ..என்ன இது..??”

“என் ஃபோட்டோ..!!”

“இ..இது எதுக்கு..??”

“என் உடம்பையும் அனுபவிச்சுட்டு.. உங்க ஆல்பத்துல இந்த ஃபோட்டோவையும் சேர்த்துக்கங்க..”

நந்தினியின் வார்த்தைகள் அசோக்கின் மீது சாட்டை சொடுக்கின. அந்த வார்த்தைகள் ஏற்படுத்திய வலியில் துடித்துப் போனான். அதே நேரம் அந்த வார்த்தைகள் அவனுக்குள் ஆத்திரத்தையும் கிளப்பி விட்டன. உடனே குரலை உயர்த்தி கத்தினான்.

“அப்படியே அறைஞ்சிருவேன் நந்தினி.. என்ன பேச்சு பேசுற..??”

“ஏன்.. நான் பேசுனதுல என்ன தப்பு..?? அவளுககிட்ட காட்டவேண்டிய ஆசையைத்தான.. தவறிப்போய் எங்கிட்ட காட்டிருக்கீங்க..?? அந்த ஆல்பத்துல இருக்குறவளுக மாதிரித்தான என்னையும் நெனச்சிருக்கீங்க..?? அப்புறம் என்ன.. இன்னைக்கே என் மேட்டரையும் முடிச்சுட்டு.. என் ஃபோட்டோவையும் சேத்துக்கங்க..!!” நந்தினி சீற, அசோக் தலையை பிடித்துக் கொண்டான்.

“ப்ளீஸ் நந்தினி.. அப்டிலாம் பேசாத.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..!! எனக்கு அவளுகளும் நீயும் ஒன்னு இல்ல.. இது சத்தியம்..!!” கெஞ்சுகிற குரலில் சொன்னான்.

“அப்போ நான் யாரு..?? சொல்லுங்க.. நான் யாரு..??? பொண்டாட்டி இல்லைன்னு எப்போவோ சொல்லிட்டீங்க..!! இத்தனை நாளா ஃப்ரண்டுன்னு சொல்லிட்டு இருந்தீங்க.. ஃப்ரண்டை எவனும் இங்க புடிச்சு கசக்க மாட்டான்..!! பொண்டாட்டியும் இல்ல.. ஃப்ரண்டும் இல்லன்னா.. அப்புறம் நான் யாரு..??? அந்த மாதிரி பொண்ணுதான..???” நந்தினி வெடித்து சிதறினாள்.

“ப்ளீஸ் நந்தினி.. அப்படி சொல்லாத..”

“ஆமாம்.. அப்படி கூட சொல்லக்கூடாது..!! அட்லீஸ்ட் அந்த பொண்ணுகளுக்காவது.. இவன் தொடுறது லவ்னால இல்லன்னு முன்னாடியே தெரியும்.. எனக்கு அது கூட தெரியலையே..?? நீங்க என்ன நெனைப்புல என்னை தொட்டீங்கன்னு கூட புரியாத முட்டாளா இருந்திருக்கேனே..?? அந்தப் பொண்ணுகளை விட கேவலமானவ நான்..!!”

சொல்லிவிட்டு நந்தினி அப்படியே தரையில் அமர்ந்தாள். குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தாள். அசோக் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தான். என்ன செய்வதென்றே புரியாமல் செயலாற்றுப் போய் நின்றிருந்தான். நந்தினி அந்த மாதிரி உடைந்து போய் அழுவது, அவனுக்கு இதயத்தில் ஊசி செருகியது போலிருந்தது. மெல்ல நடந்து சென்று அவளை நெருங்கினான்.

“அழாத நந்தினி.. ப்ளீஸ்..” என்றவாறே அவளுடைய தோளை தொட்டான்.

“ச்சீய்.. கையை எடுங்க.. எனக்கு அப்படியே அருவருப்பா இருக்கு..!!”

என்று நந்தினி அவனுடைய கையை பட்டென தட்டிவிட்டாள். அவளுடைய செய்கை தந்த வேதனையில் அசோக் துடித்துப் போனான்.

அத்தியாயம் 23

அடுத்து வந்த சில நாட்களில்.. நந்தினியும் சந்தோஷமாக இல்லை.. அசோக்கும் நிம்மதியாக இல்லை..!! ஒவ்வொரு நாள் பொழுதும் அவர்களுக்கு ஒரு போராட்டமாகவே கழிந்தது..!!

நந்தினி ஒரு மாதிரி விரக்தியின் உச்சத்தில் இருந்தாள். எதிலுமே பிடித்தம் இல்லாமல் எந்திரம் போலவே நடந்து கொண்டாள். அசோக்குடைய செயலை எண்ணி எண்ணி தினமும் அகத்துக்குள் குமைந்தாள். அவனை மாற்றிவிடலாம் என தான் நம்பியதை நினைத்து, ‘பைத்தியக்காரி..’ என்று மனதுக்குள் சிரித்துக் கொண்டாள். அவனுக்கு தன் மீது காதல் வந்துவிட்டது என்ற எண்ணத்தில், தன் கால்கள் தரையில் நில்லாமல் மிதந்ததை நினைத்து, ‘வெக்கங்கெட்டவ’ என்று தன்னை தானே திட்டிக் கொண்டாள்.

அவளுடைய பார்வைக்கு, அவளது எதிர்காலமே இப்போது ஒரு சூனியமாக காட்சியளித்தது. ‘இவனுடனான என் வாழ்க்கை, என்னை எங்கே கொண்டு சேர்க்கும்..?’ என்று அவள் அடிக்கடி எழுப்பிய கேள்விக்கு, அவளுடைய புத்தியால் தெளிவான பதில் சொல்லவே முடியவில்லை. ‘காதலித்து வேறு தொலைத்து விட்டேன்.. இனி கண்ணீர் மட்டுந்தான் மிச்சம் போலிருக்கிறது..’ என்றே அவளுக்கு தோன்றியது.

விரக்தியில் இருந்தாலும் அசோக்கிற்காக அன்றாடம் செய்கிற வேலைகளில் இருந்து அவள் விலகிவிடவில்லை. எப்போதும் போலவே.. காலையில் அவனை துயில் எழுப்புவாள்.. ஆனால் அவள் பார்வையில் காதல் இருக்காது..!! காபி கலந்து அவனிடம் நீட்டுவாள்.. அதில் ஒரு கனிவு இருக்காது..!! உணவு சமைப்பாள்.. அள்ளிக்கொண்டு ஆபீசுக்கு செல்வாள்.. உடனிருந்து பரிமாறுவாள்.. ஆனால் அவள் உள்ளத்தில் பரிவு இருக்காது..!! அசோக் மீது அவளுக்கிருந்த அன்பும் அக்கறையும் இப்போது நமத்துப் போயிருந்தன..!!

சிலநேரங்களில் ‘இப்படியே இருந்துவிட்டு போய் விடலாமே..’ என்று கூட அவளுக்கு தோன்றும். விரக்தியில் உழன்றவள் அதிலேயே ஒரு சுகம் காண ஆரம்பித்திருந்தாள். ‘இவனுடன் திருமணம் என்றதும்.. ஆரம்பத்தில் இந்த மாதிரியான ஒரு வாழ்க்கையைத்தானே நான் எதிர்பார்த்திருந்தேன்..? இடையில் வந்ததுதானே இவன் மீதான காதல், இனிமையான வாழ்க்கை என்ற நம்பிக்கை எல்லாம்..? அந்த காதலையும் நம்பிக்கையையும் கனவென எண்ணி மறந்தால் என்ன..? எப்படியோ போய் தொலைகிறான் எனக்கென்ன என்றே இருந்தால் என்ன..?’

இந்த மாதிரி ஒரு விரக்தியான, விட்டேத்தியான மனோபாவத்துடன்தான் அந்த சில நாட்களில் அசோக்கை அவள் அணுக முயன்றாள்.

அசோக்கோ வேறு மாதிரியான மனநிலையில் சிக்கி தவித்தான். நந்தினியின் சோகம் அவனையும் சேர்த்து வாட்டியது. அவளுடைய வாடிப்போன முகத்தை கண்டபோதெல்லாம் அவனும் மனம் வாடினான். அவனை எப்போதும் ஒருவித குறும்புடனே பார்க்கும் அவளுடைய கண்கள், இப்போது வெறுப்பை வீசியதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கனிவும் கலகலப்புமான அவளுடைய பேச்சு, மீண்டும் ஒலிக்காதா என அவன் காதுகள் ஏக்கம் கொண்டன. எல்லாவற்றிற்கும் காரணம் தனது அவசர புத்திதான் என்று முதலில் அவனுக்கு தோன்றியது.

‘அவள் என்னை காதலிக்கிறாள் என்ற சந்தேகம் ஏற்கனவே எனக்கு இருந்தது. அப்படி இருக்க.. அந்த முத்தம் அவளுக்குள் எந்த மாதிரியான கனவுகளை கொடுத்திருக்கும் என்று நான் எண்ணியிருக்க வேண்டாமா..? அது காதல் இல்லை வெறும் காமம் என்று வெடுக்கென சொன்னால்.. அவள் எந்த மாதிரியான வேதனையில் வெந்து போவாள் என்று ஏன் நான் சிந்திக்கவில்லை..? அவசரப்பட்டிருக்க வேண்டாமோ..? பொறுமையாக அவளுக்கு எடுத்துரைத்திருக்க வேண்டுமோ..?’

‘ஆமாம்.. அதை எப்படி பொறுமையாக எடுத்துரைப்பது..? பொறுமையாக சொன்னால் மட்டும் அவளுக்கு என்ன குளுகுளுவென்றா இருக்கப் போகிறது..? செருப்பால் அறைவது மாதிரியான சேதி அது.. வலது கால் செருப்பாய் இருந்தால் என்ன.. இடது கால் செருப்பாய் இருந்தால் என்ன.. வலியில் ஏதும் வித்தியாசம் இருக்கப் போவதில்லை..!! முதலில் அந்த விஷயத்தையே ஏன் அவளிடம் சொன்னாய்..? ஏன் அவளுடைய கனவுகளை பொசுக்கி கண்ணீர் சிந்தவிட்டாய்..?’

‘சொல்லாமல் என்ன செய்வது..? உண்மையை சொல்லாமல் காலம் தாழ்த்துவது தவறில்லையா..? ஏதோ ஒரு விபத்து மாதிரி.. என்னையும் அறியாமல் அப்படி ஒரு காரியம் செய்துவிட்டேன்.. நான் செய்த அந்த காரியத்தால் அவளும் சந்தோஷத்தில் மிதக்க ஆரம்பித்து விட்டாள்.. ஆனால் அவள் அனுபவித்தது போலி சந்தோஷம் அல்லவா..? அந்த சந்தோஷம் போலி என்று சுட்டிக் காட்டுவதை தவிர வேறென்ன செய்வது..? காதல் என்று அவள் தவறாக எண்ணியிருப்பதை காமம் என்று தெளிவு படுத்துவது எனது கடமை அல்லவா..?’

‘இரு இரு.. முதலில் உனக்கு அந்த தெளிவு இருக்கிறதா..?? நீ அவளை முத்தமிட்டதன் காரணம் வெறும் காமம் மட்டுந்தானா..?? அதில் காதல் ஒளிந்திருப்பதாக உனக்கு தோன்றவில்லையா..?? உன்னுடைய அந்த முத்தத்தில் காதலை உணர்ந்ததாக அவள் சொன்னாளே.. அது ஏன் நிஜமாக இருக்க கூடாது..?? நீயும் கூட அவளை முத்தமிடும் தருணத்தில் தெளிந்த மனநிலையுடன்தானே இருந்தாய்..?? அந்த முத்தத்தின் பின்னணியில் இருப்பது.. நீண்ட நாளாய் உள்ளுக்குள் புதைந்திருந்த காதலா.. இல்லை.. அன்றொரு நாள் திடீரென பூத்த காமமா..??’

அசோக்கின் மனசாட்சி அப்படி ஒரு கேள்வி கேட்டதுமே, அவனது சிந்தனை ஓட்டம் சீராக இருக்காது. குழப்பத்துக்குள் ஆழ்ந்துவிடுவான். ‘நந்தினிக்கு ஏற்படுத்திய வலி எனக்கும் வேதனை அளிக்கிறது.. அவளுடைய கள்ளம் கபடமற்ற சிரிப்பு, மீண்டும் அவள் முகம் ஏறாதா என நானும் ஏங்குகிறேன்.. அவள் எப்போதும் போல என்னை பார்க்க மாட்டாளா.. பேச மாட்டாளா.. பழக மாட்டாளா.. என என் மனம் தவியாய் தவிக்கிறது.. அப்படியானால் அவள் மீது எனக்கு இருப்பது காதல்தானோ..??’

‘இல்லை.. என் வாழ்வில் இனி காதலே கிடையாது என்று.. என் மனதை சுற்றி ஒரு கோட்டை எழுப்பி வைத்திருக்கிறேனே.. அதையும் மீறி காதல் எப்படி உட்புகும்..?? அவள் மீது காதலிருந்தால் ‘நான் உனக்கு நல்ல மனைவியாக இருக்கிறேன்.. நீ எனக்கு நல்ல கணவனாக இருக்கிறாயா..?’ என்று அவள் உருக்கமாக கேட்டபோது, என் மனம் ஏன் மகிழ்ந்து போகவில்லை..?? முத்தமிட்டதை கூட காதல் என்று கொள்ளலாம்.. அதன்பிறகு செய்த இன்னொரு காரியத்தை எந்த கணக்கில் எடுத்துக் கொள்வது..?? அப்படியானால் அவள் மீது எனக்கு இருப்பது காதல் இல்லையோ..??’

இப்படி குறுக்கும் மறுக்குமாய் சிந்திக்க சிந்திக்க, அசோக்கிற்கு ஒரு குழப்ப குவியல்தான் மிஞ்சும். அவன் மனதில் தெளிவில்லை என்பது அவனுக்கே புரிந்து போனது. நந்தினியிடம் மனம் விட்டு பேசி, தனது குழப்பத்தை எடுத்துரைக்கலாமா என்று யோசித்தான். அவள் இதற்கு எதுவும் தீர்வு வைத்திருக்கிறாளா பார்க்கலாம் என்று தோன்றியது.

ஒருநாள் இரவு.. அவர்கள் அறையில்.. தூங்க செல்லும் வேளையில்.. அவள் தரையில் படுத்துக் கொண்டு அந்தப் பக்கமாக திரும்பிக் கொள்கையில்.. அவளுடைய முதுகை பார்த்தபடியே.. மெல்ல ஆரம்பித்தான்..!!

“ந..நந்தினி..”

“ம்ம்ம்..” அவள் திரும்பாமலே சப்தம் எழுப்பினாள்.

“உ..உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..”

“எதைப் பத்தி..?”

“அ..அதான்.. அன்னைக்கு மொட்டை மாடில..” அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே,

“ஏன்.. இன்னும் என்னை ஏதாவது குத்தி கிழிக்க வேண்டியது பாக்கி இருக்கா..??” நந்தினி வெடுக்கென கேட்டாள்.

“ச்சேச்சே.. அப்டி இல்ல..”

“அப்புறம்..?? அந்த அசிங்கத்தை மறக்க நெனைக்கிறேன்.. விட மாட்டீங்களா..??”

அவள் அந்த மாதிரி சூடாக கேட்கவும், அசோக்கிற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. ‘இப்படி முகம் கொடுத்து கூட பேச மாட்டேன் என்கிறாளே..? வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதையே சொல்லிக்காட்டி என்னை நோகடிக்கிறாளே..? இவளுக்கு எப்படி பேசி புரிய வைப்பது..?’

அசோக் தலையை பிடித்துக் கொண்டான். கொஞ்ச நேரம் அவளுடைய முதுகையே வெறித்துப் பார்த்துவிட்டு, அப்புறம் அவனும் அமைதியாக அவளுக்கு முதுகு காட்டி, திரும்பி படுத்துக் கொண்டான்.

“சரி.. சொல்லுங்க.. என்ன..?” என்றாள் நந்தினி, ஒரு இரண்டு நிமிடங்கள் கழித்து வெறுப்பாக.

“ஒண்ணுல்ல விடு..” என்றான் அசோக்கும் வீராப்பாக.

அவர்களுக்கு இடையில் விழுந்த இந்த விரிசலை வீட்டில் இருந்த மற்றவர்களும் கவனிக்க தவறவில்லை. இறுகிப்போன முகத்துடன் அவர்கள் திரிந்தது, கௌரம்மாவையும், மஹாதேவனையும் கவலை கொள்ள செய்தது. ஓரிரு நாட்கள் பொறுத்துப் பார்த்த மஹாதேவன் மகனிடமே கேட்டுவிட்டார்.

“என்னடா ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும்..?”

“யாரு ரெண்டு பேருக்கும்..?” அசோக் புரியாத மாதிரி நடித்தான்.

“உனக்கும் உன் பொண்டாட்டிக்கும்..”

“எ..எங்களுக்கு என்னாச்சு.. ஒன்னுல்லையே..?”

“இல்ல.. ஏதோ சரியில்ல.. உங்களுக்குள்ள எதுவும் பிரச்னையா..?”

“அதெல்லாம் ஒண்ணுல்ல டாட்..”

“பொய் சொல்லாத அசோக்.. உங்களுக்குள்ள ஏதோ பிரச்னைன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது.. என்ன விஷயம்னு மறைக்காம என்கிட்டே சொல்லு..” அவர் துருவி துருவி கேட்கவும், அசோக் எரிச்சலானான்.

“புருஷன் பொண்டாட்டின்னா ஏதாவது பிரச்னை வந்துட்டுத்தான் இருக்கும்.. எல்லாம் உங்ககிட்ட சொல்லிட்டு இருக்க முடியுமா..? இதுக்குத்தான் எனக்கு கல்யாணமே வேணாம்னு சொன்னேன்.. நீங்கதான் கட்டாயப்படுத்தி பண்ணி வச்சீங்க.. இப்போ நான் கெடந்து கஷ்டப்படுறேன்..!!”

என்று தந்தை மீது பாய்ந்தான். நந்தினி மீதிருந்த எரிச்சலையும், கோபத்தையும் மஹாதேவனிடம் காட்டினான். அவனுடைய சீற்றத்தில் மஹாதேவன் வாயடைத்து போனார். அப்புறம்.. கணவன், மனைவிக்கு இடையிலான உள்விவகாரத்தில், தான் தலையிடாமல் சற்று ஒதுங்கி இருப்பதே நல்லது என்று தோன்றவும், மேற்கொண்டு அவனை கேள்வி கேளாமல் அமைதியாக திரும்பி நடந்தார்.

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

Comments